Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

panitan/stock.adobe.com

நினைவுநாளுக்கான விசேஷ ஊழியம்

வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!

 பூமியில் இருந்தபோது இயேசு மக்கள்மீது நிறைய அன்பு காட்டினார். முக்கியமாக, ஏழைகளிடமும் கஷ்டத்தில் தவித்தவர்களிடமும் ரொம்பவே பாசமாக நடந்துகொண்டார். (மத்தேயு 9:36) மற்றவர்களுக்காக அவருடைய உயிரையே கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு தன் அதிகாரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி இந்த முழு பூமியிலிருந்தும் வறுமையை அடியோடு ஒழித்துக்கட்டுவார். இந்த விதத்தில், மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டுவார்.

 இயேசு செய்யப்போவதை ஒரு கவிதையாக பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •    “எளியவர்களுக்காக அவர் வழக்காடட்டும். ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்.”—சங்கீதம் 72:4.

 இயேசு இதுவரை செய்திருக்கும் விஷயங்களுக்காகவும் இனிமேல் செய்யப்போகிற விஷயங்களுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? லூக்கா 22:19-ல் இயேசு தன் சீஷர்களிடம் தன்னுடைய மரணத்தை நினைத்துப் பார்க்கும்படி சொன்னார். அதனால்தான் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் மரணத்தை நினைத்துப் பார்ப்பதற்காக ஒவ்வொரு வருஷமும் அந்த நாளில் ஒன்றாகக் கூடிவருகிறார்கள். இந்த வருஷம் இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 2024 அன்று நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

நினைவுநாள் நிகழ்ச்சி நடக்கும் இடம்