Skip to content

‘ஜீவ புஸ்தகத்தில்’ யாருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன?

‘ஜீவ புஸ்தகத்தில்’ யாருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன?

பைபிள் தரும் பதில்

 “வாழ்வின் சுருள்,” “நினைவுப் புத்தகம்” என்றெல்லாம் அழைக்கப்படுகிற ‘ஜீவ புஸ்தகத்தில்,’ அதாவது ‘வாழ்வின் புத்தகத்தில்,’ முடிவில்லாத வாழ்வைப் பரிசாகப் பெறப்போகிறவர்களின் பெயர்கள் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 3:5; 20:12; மல்கியா 3:16) ஒரு நபர் தனக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிகிறாரா இல்லையா என்பதை வைத்து கடவுள் அந்தப் பெயர்களைத் தீர்மானிக்கிறார்.—யோவான் 3:16; 1 யோவான் 5:3.

 “உலகம் உண்டானதுமுதல்,” அதாவது மனிதகுலம் தோன்றிய சமயத்திலிருந்தே, கடவுள் தனக்கு உண்மையாகச் சேவை செய்கிற ஒவ்வொருவரையும் தன்னுடைய நினைவில் வைத்திருக்கிறார்; ஆம், ஒரு புத்தகத்தில் பெயர்களை எழுதி வைப்பதுபோல வைத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 17:8) விசுவாசமிக்க மனிதரான ஆபேலின் பெயர்தான் முதன்முதலாக வாழ்வின் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டது. (எபிரெயர் 11:4) அந்தப் புத்தகம் வெறுமனே பெயர்ப் பட்டியல் அடங்கிய புத்தகம் கிடையாது; யெகோவா ‘தனக்குச் சொந்தமானவர்களை அறிந்திருக்கிற’ அன்பான கடவுள் என்பதைக் காட்டுகிற புத்தகமாகவும் அது இருக்கிறது.—2 தீமோத்தேயு 2:19; 1 யோவான் 4:8.

“வாழ்வின் புத்தகத்திலிருந்து” பெயர்களை அழித்துப்போட முடியுமா?

 முடியும். பூர்வ இஸ்ரவேலில் இருந்த கீழ்ப்படியாத ஜனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது கடவுள் இப்படிச் சொன்னார்: “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன்.” (யாத்திராகமம் 32:33) ஆனால், நாம் விசுவாசமாக இருந்தால், நம்முடைய பெயர் ‘வாழ்வின் சுருளில்’ எப்போதுமே இருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:12.