கொலோசெயருக்குக் கடிதம் 1:1-29

1  கடவுளுடைய விருப்பத்தால்* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல் நம் சகோதரராகிய தீமோத்தேயுவோடு+ சேர்ந்து,  கொலோசெ நகரத்தில் கிறிஸ்துவுடன் ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்களும் உண்மையுள்ளவர்களுமான சகோதரர்களுக்கு எழுதுவது: நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் நம் எஜமான் இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்;  ஏனென்றால், கிறிஸ்து இயேசுமீது நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மீதும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றிக் கேள்விப்பட்டோம்.  உங்களுடைய பரலோக நம்பிக்கை நிறைவேறப்போவதைப்+ பற்றி நீங்கள் தெரிந்திருப்பதால் அப்படிப்பட்ட நல்ல மனப்பான்மையைக் காட்டுகிறீர்கள். சத்தியத்தின் செய்தியாகிய நல்ல செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்த நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள்.  உலகம் முழுவதும் பரவி ஏராளமாகப் பலன் தந்து வருகிற அந்த நல்ல செய்தி+ உங்களிடமும் வந்து சேர்ந்தது; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய உண்மையை நீங்கள் திருத்தமாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட நாள்முதல் உங்கள் மத்தியிலும் பலன் தந்து வருகிறது.  அதைத்தான் நம் அன்பான சக அடிமையாகிய எப்பாப்பிராவிடமிருந்து+ நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். அவர் கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியராக எங்கள் சார்பில் சேவை செய்கிறார்.  கடவுளுடைய சக்தியால் நிறைந்து நீங்கள் காட்டுகிற அன்பைப் பற்றியும் அவர்தான் எங்களிடம் சொன்னார்.  அதனால், உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் நாங்கள் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்கிறோம்.+ எல்லா ஞானத்தையும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலையும்+ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடவுளுடைய விருப்பத்தை* பற்றிய திருத்தமான அறிவால் நிரப்பப்பட வேண்டும்+ என்றும் ஜெபம் செய்கிறோம். 10  அப்போதுதான், கடவுளாகிய யெகோவாவுக்கு* ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவீர்கள்; நீங்கள் செய்கிற எல்லா நல்ல செயல்களும் பலன் தரும், அவரைப் பற்றிய திருத்தமான அறிவில்+ மேலும் மேலும் வளருவீர்கள். 11  அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+ 12  அறிவொளி பெற்ற பரிசுத்தவான்களுடைய ஆஸ்தியில்+ பங்கு பெறுவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிய பரலோகத் தகப்பனுக்கு நன்றி சொல்வீர்கள். 13  அவர் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து காப்பாற்றி,+ தன்னுடைய அன்பான மகனின் அரசாங்கத்துக்குக் கொண்டுவந்தார். 14  அந்த மகனுடைய மீட்புவிலையால் நமக்கு விடுதலை, அதாவது பாவ மன்னிப்பு, கிடைத்திருக்கிறது.+ 15  அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும்+ படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும்*+ இருக்கிறார். 16  ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்+—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.+ 17  அவர் எல்லா படைப்புகளுக்கும்* முன்பே இருக்கிறார்;+ அவர் மூலமாகத்தான் எல்லாம் உண்டாக்கப்பட்டன. 18  அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார். 19  ஏனென்றால், எல்லாம் அவருக்குள் நிறைவாகக் குடியிருக்க வேண்டும்+ என்று கடவுள் விரும்பினார். 20  அதோடு, சித்திரவதைக் கம்பத்தில்* சிந்தப்பட்ட இரத்தத்தால்+ சமாதானத்தை ஏற்படுத்தி, பூமியிலும் பரலோகத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் அவர் மூலமாகத் தன்னோடு சமரசமாக்க வேண்டுமென்றும் கடவுள் விரும்பினார்.+ 21  ஒருகாலத்தில் நீங்கள் கெட்ட விஷயங்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் கடவுளுக்கு அன்னியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள். 22  ஆனால், இப்போது கடவுள் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் குற்றமில்லாதவர்களாகவும் தனக்கு முன்னால் நிறுத்துவதற்காக,+ மனித உடலில் இருந்தவருடைய மரணத்தின் மூலம் உங்களைத் தன்னோடு சமரசமாக்கியிருக்கிறார். 23  ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+ 24  இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+ 25  கடவுளுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாய்ப் பிரசங்கிப்பதற்காக அவர் எனக்குக் கொடுத்த நிர்வாகப் பொறுப்பின்படி,+ அந்தச் சபைக்கு நான் ஊழியனானேன். 26  கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம்+ கடந்த சகாப்தங்களுக்கும்* கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது.+ ஆனால், இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.+ 27  மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த அந்தப் பரிசுத்த ரகசியத்தை+ மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வதில் கடவுள் சந்தோஷம் அடைந்திருக்கிறார். கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருப்பதால் அவரோடு மகிமைப்படுவதற்கான+ நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் பரிசுத்த ரகசியம். 28  அவரைப் பற்றித்தான் நாங்கள் அறிவித்து வருகிறோம். ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் முதிர்ச்சியுள்ள சீஷராகக்+ கடவுள் முன்னால் நிறுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் புத்திசொல்லி, எல்லா ஞானத்தோடும் கற்றுக்கொடுத்து வருகிறோம். 29  எனக்குள் வல்லமையோடு செயல்படுகிற அவருடைய பலத்தின் உதவியால்+ கடினமாகவும் தீவிரமாகவும் இதற்காக உழைத்து வருகிறேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தால்.”
வே.வா., “சித்தத்தை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “பிறப்பாகவும்.”
நே.மொ., “எல்லாவற்றுக்கும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா