ஏசாயா 48:1-22

48  யாக்கோபின் வம்சத்தாரே, இதைக் கேளுங்கள்.நீங்கள் இஸ்ரவேல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறீர்கள்.+நீங்கள் யூதாவின் ஊற்றிலிருந்து* வந்தவர்கள்.நீங்கள் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறீர்கள்.+இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறீர்கள்.ஆனாலும், அதையெல்லாம் உண்மையோடும் நீதியோடும் செய்வதில்லை.+   நீங்கள்* பரிசுத்த நகரத்தைச்+ சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.இஸ்ரவேலின் கடவுளுடைய உதவியைத் தேடுகிறீர்கள்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.   அவர் இப்படிச் சொல்கிறார்: “நடந்து முடிந்த விஷயங்களெல்லாம் ரொம்பக் காலத்திற்கு முன்னாலேயே நான் சொன்னதுதான்.அதை என் வாயாலேயே சொன்னேன். அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தினேன்.+ அதைத் திடீரென்று நடத்திக் காட்டினேன்.+   நீங்கள் எந்தளவுக்கு முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்று எனக்குத் தெரியும்.உங்கள் கழுத்து இரும்பு போலவும், உங்கள் நெற்றி செம்பு போலவும் கடினமாக இருக்கிறது.+   அதனால்தான், இந்த விஷயங்களெல்லாம் நடப்பதற்கு முன்பே, நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.‘எங்களுடைய தெய்வம்தான்* இதைச் செய்தது.நாங்கள் செதுக்கிய சிலையும் நாங்கள் வார்த்த உலோகச் சிலையும்தான் இதையெல்லாம் சொன்னது’ என்று நீங்கள் சொல்லாமல் இருப்பதற்காகவே இப்படிச் செய்தேன்.   இதையெல்லாம் நீங்கள் காதால் கேட்டீர்களே, கண்ணால் பார்த்தீர்களே. மற்றவர்களிடம் சொல்ல மாட்டீர்களா?+ இன்றுமுதல் புதிய விஷயங்களை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.+உங்களுக்கு மறைக்கப்பட்டிருந்த ரகசியங்களைத் தெரிவிக்கப்போகிறேன்.   இதெல்லாம் இப்போதுதான் தோன்றின, ரொம்பக் காலத்துக்கு முன்பு அல்ல.அதனால், ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்’ என்று உங்களால் சொல்ல முடியாது.இதெல்லாம் இன்றுவரை நீங்கள் கேள்விப்படாத விஷயங்கள்.   உண்மையிலேயே, இதெல்லாம் உங்களுக்குத் தெரியவே தெரியாது.+முன்பு உங்கள் காது அடைக்கப்பட்டிருந்தது. நீங்கள் எல்லாரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று எனக்குத் தெரியும்.+பிறந்ததிலிருந்தே அடங்காதவர்கள் என்று பெயரெடுத்திருக்கிறீர்கள்.+   ஆனாலும், என் பெயரின் புகழுக்காக என்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்வேன்.+என்னுடைய மகிமைக்காக என்னையே கட்டுப்படுத்திக்கொள்வேன்.உங்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+ 10  நான் உங்களைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலப் புடமிடவில்லை.+ வேதனை என்ற நெருப்பில் போட்டு உங்களைச் சோதித்துப் பார்த்தேன்.*+ 11  நான் எனக்காகவே, என் பெயருக்காகவே, எல்லாவற்றையும் செய்கிறேன்.+என் பெயர் கெட்டுப்போக நான் எப்படி அனுமதிப்பேன்?+ என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன். 12  நான் அழைத்த யாக்கோபே, இஸ்ரவேலே, நான் சொல்வதைக் கேள். நான் மாறாதவர்.+ முதலும் நானே, கடைசியும் நானே.+ 13  என் கைதான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டது.+என் வலது கைதான் வானத்தை விரித்தது.+ நான் கட்டளை கொடுத்தால் அவை கீழ்ப்படியும். 14  நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்து கேளுங்கள். எந்தத் தெய்வமாவது இதையெல்லாம் சொன்னது உண்டா? யெகோவாவுக்குப் பிரியமானவன்+ அவருக்கு இஷ்டமானபடி பாபிலோனுக்குச் செய்வான்.+அவன் கல்தேயர்களைத் தோற்கடிப்பான்.+ 15  நானே இதைச் சொன்னேன், நான்தான் அவனைக் கூப்பிட்டேன்.+ அவனை அழைத்து வந்தேன், அவனுக்கு வெற்றி தருவேன்.+ 16  நீங்கள் என்னிடம் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள். தொடக்கத்திலிருந்தே நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன்.+ அது நடக்க ஆரம்பித்ததிலிருந்தே நான் அங்கே இருந்தேன்.” இப்போது உன்னதப் பேரரசராகிய யெகோவா அவருடைய சக்தியைத் தந்து என்னை அனுப்பியிருக்கிறார். 17  இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும், உங்களை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள்.உங்களுக்குப் பிரயோஜனமானதை* நான் கற்றுக்கொடுக்கிறேன்.+நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்.+ 18  நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+ 19  உங்களுடைய சந்ததியில் வருகிற எல்லாரும்கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருப்பார்கள்.+ அவர்களுடைய பெயர் என்முன் நிலைத்திருக்கும், அது ஒருபோதும் அழியாது.” 20  பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+ கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்! அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+ பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+ இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+ 21  பாலைநிலம் வழியாக அவருடைய ஜனங்களை அழைத்து வந்தபோது அவர்களைத் தாகத்தில் தவிக்க விடாமல்,+ அவர்களுக்காக அவர் கற்பாறையைப் பிளந்தார்.அதிலிருந்து தண்ணீரைப் பாய்ந்து வரச் செய்தார்.”+ 22  “கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது” என்று யெகோவா சொல்கிறார்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “வம்சத்திலிருந்து.”
நே.மொ. “அவர்கள்.”
வே.வா., “சிலைதான்.”
அல்லது, “வேதனை என்ற நெருப்பில் நீங்கள் இருந்தபோது உங்களைத் தேர்ந்தெடுத்தேன்.”
வே.வா., “உங்களுடைய நன்மைக்காகவே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா